– இந்திய அரசு அறிவிப்பு
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி , பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தேர்வு செய்யப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 19-ஆம் தேதி கூடியது.
அப்போது மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு 2019- ஆம் ஆண்டுகான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவது என ஒருமனதாக தேர்வு செய்தது.
ஓமன் நாட்டை தனது திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். மேலும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது அமைதி முயற்சிகள் மேற்கொள்ள பெரும் ஒத்துழைப்பு வழங்கியவர்.
இந்தியாவில் கல்வி பயின்றவர். இந்திய முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் ஆவார். இதன் காரணமாக ஓமன் , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு சிறப்புடன் இருக்க ஒரு சிற்பியாக திகழ்ந்தார். இதனால் இரு நாடுகளின் உறவு புதிய உச்சத்தை அடைந்தது.
அத்தகைய சிறப்பு மிக்க மனிதருக்கு இந்த விருது வழங்குவது மிகவும் பொருத்தமாகும். இந்த விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம், தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களைக் கொண்டது ஆகும். இந்த தகவலை இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.