-அபுதாபி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டது
அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்யேகமாக புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மற்றொரு அங்கமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனிலும் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாக திகழும், அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் விளையாடும் வகையில் புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 1,648 சதுர மீட்டர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் விளையாடும் வகையில் உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ற வகையில் விளையாட முடியும். மேலும் அவர்கள் தங்களது உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள உதவுவதுடன், சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.