மக்களே உஷார்.. இந்த மீனில் பிளாஸ்டிக் இருக்குதாம்

-அதிர்ச்சி தகவல்.!!!

மீனில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள் ,இறைச்சி, மீன் ஆகிய வகைகளும் அடங்கும்.

இறைச்சி வகைகளை  விட மீனில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மீனை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். இறைச்சி பிடிக்காதவர்கள் மீனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மீனில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

பட்டினம்பாகத்தில் விற்பனையாகும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களின் தசையில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கடலியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here