40 நாடுகளுக்கு அழைப்பு- ஜொ பைடன
பருவநிலை மாறுபாடு தொடர்பாக விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பருவநிலை மாறுபாடு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உள்ளிட்ட மாநாட்டுக்கு 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்துக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பருவநிலை மாறுபாடு. இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க 40 நாடுகளின் தலைவர்கள் ஏப்ரல் 22, 23 ஆம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியுடன் பல தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாட்டை பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளது.