ரகசியத்தை மறைத்தேன்… துணிச்சலாக மனம்திறந்த கோடீஸ்வர பெண்
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரியும், நடிகையுமான ஷாரன் ஸ்டோன் தான் பள்ளி பருவத்தில் கருத்தரித்து பின்னர் கருக்கலைப்பு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது 63 வயதாகும் ஷாரன் ஸ்டோனில் சொத்து மதிப்பு $60 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் தன் வாழ்க்கை தொடர்பான நினைவுகளை தி பியூட்டி ஆப் லிவிங் டுவைஸ் என்ற புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் தனது பள்ளி பருவம் பற்றியும் விளக்கியுள்ளார். அதில், பள்ளியில் படித்தபொழுது, ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அவருடன் சுற்றி திரிந்துள்ளார். இதில் ஷாரன் கர்ப்பிணியானார்.
இதனால் ஓஹியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவர்கள் ஓடோடி சென்றுள்ளனர். ஏனெனில், அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்வது எளிது என குறிப்பிட்டு உள்ளார்.
அதன்பின் அவருக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், அதனை யாரிடமும் கூறாமல் ரகசியம் காத்து வந்துள்ளார். சென்ற இடத்திலெல்லாம் அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன்பின்னர் நிலைமை மோசமடைந்து உள்ளது. ஆனால், இது ரகசியமான விடயம், தவிர இதுபற்றி கூறுவதற்கு என தனக்கு ஒருவரும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்பு, ரத்தம் தோய்ந்த தனது துணிகளையும் உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தி எரித்துள்ளார்.
இதன்பின்னரே முறையாக பெற்றோர் ஆவதற்கான கவுன்சிலிங்கிற்கு சென்று ஆலோசனை பெற்றுள்ளார். குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.