புத்ராஜெயா: டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி புதிய போலீஸ் படைத்தலைவராக (ஜஜிபி) நியமிக்கப்பட உள்ளார். டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் மே 3 ஆம் தேதி ஓய்வு பெறுவதை தொடர்ந்து இவர் பதவியேற்கவுள்ளார்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுடின் அக்ரில் சானிக்கு தனது நியமனக் கடிதத்தை இன்று (ஏப்ரல் 30) வழங்கினார். அக்ரில் சானியின் நியமனம் மே 4 முதல் அமலுக்கு வரும்.
துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் முகமது சைட், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆணையத்தின் (எஸ்.பி.பி) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
59 வயதான அக்ரில் சானி, போலீஸ் துறையில் பரந்த அனுபவம் பெற்றவர் மற்றும் வணிக குற்றவியல் புலனாய்வுத் துறை, தகவல் தொடர்பு வளங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை (ஸ்டார்டி) மற்றும் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை உள்ளிட்ட புக்கிட் அமானில் பல துறைகளுக்கு தலைமை தாங்கி இருக்கிறார். ஆகஸ்ட் 14,2020 அன்று அக்ரில் டாங் துணை ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்