ஜோகூர் பாரு: நேபாள நாட்டவரிடம் இருந்து கொள்ளையடித்ததாக 23 வயது போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 35 வயதுடைய சந்தேக நபர்கள் வியாழக்கிழமை (மே 6) அதிகாலை 1 மணியளவில் கெலாங் பாத்தாங் மற்றும் முத்தியாரா ரினி பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக இஸ்கந்தர் புற்றி ஒ.சி.பி.டி உதவி ஆணையர் துல்கைரி முக்தார் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள், மற்றவர்கள் கட்டுமானத் தொழிலாளி, பஸ் டிரைவர் மற்றும் tow டிரக் டிரைவர் ஆவர்.
கைது செய்யப்பட்டவர்கள் எங்களை ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் சென்றனர், அங்கு நாங்கள் இரண்டு கார்கள், ஒரு போலீஸ் அடையாள அட்டை, ஒரு ஜோடி கைவிலங்கு, மொபைல் போன்கள், கார் சாவிகள், ஏடிஎம் கார்டுகள், ஒரு தங்க நெக்லஸ் மற்றும் சில உடைகள் போன்றவற்றைக் கைப்பற்றினோம்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து குழு பல கொள்ளைகளில் ஈடுபட்டதாக நாங்கள் நம்புகிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தேக நபர்களில் ஒருவருக்கு முந்தைய மூன்று குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
பிரிவு 384, பிரிவு 379 (A) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 170 ன் கீழ் விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் மே 9 வரை நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி துல்கைரி தெரிவித்தார்.