கோலாலம்பூர்: போலி முதலீட்டு மோசடி என சந்தேகிக்கப்படும் கால் சென்டரில் போலீசார் சோதனை நடத்தியதில் முப்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று(மே 10) ஜலான் பேராக்கில் உள்ள ஒரு காண்டோமினியத்தில் சோதனை நடத்தப்பட்டதாக டாங் வாங்கி ஒ.சி.பி.டி. உதவி ஆணையர் முகமட் சைனல் அப்துல்லா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 35 பேரில், 6 பேர் சீன பிரஜைகள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களின் ஆரம்ப விசாரணையில் ஏப்ரல் 2021 முதல் குழு செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் சீனா, தைவான் மற்றும் ஹாங்காங்கிலிருந்து முதலீட்டாளர்களை குறிவைத்ததாகவும் தெரியவந்தது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு மாதத்திற்கு RM2,000 முதல் RM3,000 வரை வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்களில் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் என்று அவர் கூறினார். 20 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் செவ்வாய்க்கிழமை (மே 11) தடுப்புக்காவலில் வைக்க அனுமதி கோரப்படும் என்றார்.