மே 12 தொடங்கி ஜூன் 7 வரை நாடு தழுவிய நிலையில் எம்சிஓ அமல்

பெட்டாலிங் ஜெயா: மே 12ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி நாடளாவிய நிலையில் எம்சிஓ அமல்படுத்தப்படும்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், திங்கள்கிழமை (மே 10) ஒரு அறிக்கையில், ஹரி ராயா வருகை இப்போது தடைசெய்யப்படும் என்று கூறினார்.

அனைத்துலக கல்வித் தேர்வுகளுக்கு அமர்ந்திருக்கும் மாணவர்களைத் தவிர, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட உள்ளன. தனியார் வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஓட்டுநர் உட்பட    இ-ஹெயிலிங் வாகனங்களில் மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இருப்பினும், அனைத்து பொருளாதார துறைகளும் திறந்த நிலையில் இருக்கும். தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் புதிய பட்டியல் மே 12 முதல் ஜூன் 7 வரை செயல்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here