குப்பை வலையத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கோலாலம்பூர்:  ஜாலான் ஈப்போவில் உள்ள டாமாய் வளாகத்தின் பின்னால் உள்ள ஆற்றின் குப்பை வலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை (மே 14) காலை 11.42 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக செந்தூல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை தலைவர் ஃபதில் ஹசாம் முகமது தெரிவித்தார்.

நாங்கள் ஒரு தீயணைப்பு இயந்திரம், அவசர மருத்துவ மீட்பு சேவைகள் மற்றும் ஒன்பது பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம்.

அவர்கள் அந்த இடத்திற்கு வந்து ஆற்றின் குப்பை வலையில் மிதந்து கிடந்த ஒரு உடலைக் கண்டனர் என்று அவர் வெள்ளிக்கிழமை (மே 14) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குப்பைப் பொறியில் இருந்து உடலை அகற்றி, நண்பகல் 1.04 மணிக்கு தரையில் கொண்டு வந்ததாக ஃபதில் ஹெசம் கூறினார். சடலம் ஒரு பெண்ணுடையது  என்றும் ஆனால் அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

மேலதிக நடவடிக்கைகளுக்காக உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here