– வெளிநாட்டினர் தைவான் வர தடை
கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக அமைந்துள்ள தீவு நாடான தைவான் இருந்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாட்டினர் தைவான் வருவதற்கு ஒரு மாதம் தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தைவான் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக, உள்நாட்டு தொற்று நோயியல் நிலைமை . நமது குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மே 19 முதல் பின்வரும் எல்லை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி அவசர, மனிதாபிமான வழக்குகளுக்கான விதிவிலக்குகளுடன் வெளிநாட்டினர் தைவானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
தைவான் வழியாக பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்படும். இந்தத் தடைகள் ஜூன் மாதம் 18- ஆம் தேதி வரை தொடரும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.