– அமெரிக்கா எச்சரிக்கை!
மேலும் இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றுலாத் தளங்கள், போக்குவரத்து மையங்கள், ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், விளையாட்டு, கலாச்சார, கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் தொலை தூரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க குறைவான வளங்களே இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 21- ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் கிறிஸ்தவ தேவாலயம் , 3 ஓட்டல்களில் குண்டு வெடிப்புச் சம்பவண்கள் நிகழந்தன. அதில் வெளிநாட்டவர்கள் உட்பட 267 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளும்படி நினைவுறுத்தப்பட்டிருக்கிறது.