– 3 மாலுமிகள் மாயம்!
அண்மையில் மீன் பிடி கப்பலுடன் மோதல் என்ற செய்தி. ஜப்பானில் இந்த விபத்தும் நிகழந்தது. இப்போது மீண்டும் சரக்குக்க்கப்பல் விபத்து நடந்திருக்கிறது. ஜப்பானுக்கு சோதனைமேல் சோதனையா?
ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதியில் 11,454 டன் எடை கொண்ட அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன், சரக்குக் கப்பல் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த திடீர் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்கத் தொடங்கியது. அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர். சரக்கு கப்பல் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியதும் மாலுமிகளில் 3 பேரைக் காணவில்லை.
அவர்களில் 8 பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். மற்ற 5 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர்.
இதனை ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது. காணாமல் போன 3 மாலுமிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜப்பானிய கடல் எல்லையில் பனி மூட்டம் அதிகரித்திருப்பதால் கப்பல் விபத்துகள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
எதிர்திசைக் கப்பலை அடையாளம் காண முடியாத அளவில் பனி மூட்டம் அதிகரித்திருப்பதாக அறியப்படுகிறது.