புத்ராஜெயா: நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (மே 28) 8,290 புதிய கோவிட் -19 தொற்று பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக நான்காவது நாளாக நாடு புதிய தினசரி பதிவுகளை பதிவுசெய்தது. இன்றைய எண்ணிக்கை முந்தைய நாளில் பதிவான 7,857 வழக்குகளை விட அதிகமாக உள்ளது.
ஒரு டூவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நாட்டின் ஒட்டுமொத்த வழக்குகள் இப்போது 549,514 என்று கூறினார்.
சிலாங்கூர் தினசரி அதிகரிப்புடன் 2,052 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. கிளந்தான் 851, கோலாலம்பூரில் 830,ஜோகூரில் 762 , சரவாக் 698 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன.