– அனுபவதிற்கேற்ப ஜோ பைடன் பரிந்துரை
அமெரிக்க இந்தியர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர் என்பதற்கு அமரிக்காவின் அதிபர் ஜோ பைடன் ஆட்சி ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஆட்சியாக இருக்கட்டும் , நிர்வாகமாக இருக்கட்டும் விசுவாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுப்பவர்கள் இந்தியர்கள் என்று அகராதியில் சேர்க்கமுடியும். இதை உணர்ந்துதான் இந்தியர்களுக்கு உயர் பதவிகளை ஜோ பைடன் வழங்கி வருகிறார்.
இந்தியர்களுக்கு உயர் பதிவிகள் வழங்குவதால் மற்றவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என்ற தாழ்வான எண்ணம் அமெரிக்காவில் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கு கல்வி மதிக்கப்படுகிறது. கல்விக்கு ஏற்ற வேலை வழங்கப்படுகிறது.
பொறுப்பை உணர்ந்து செயல்படுவதிலும் மரியாதைக்குரியவர்களாகவும் அமெரிக்க இந்தியர்கள் கருத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அருண் வெங்கட்ராமன் என்பவர் அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம், வெளிநாட்டு பொருளாதார விவகாரத் துறையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டு வர்த்தக சேவையின் தலைமை இயக்குநர், வர்த்தகத்துறையில் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அருண் வெங்கட்ராமனை நியமிக்க ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இவர் சர்வதேச வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், அமெரிக்க அரசுக்கு ஆலோசனைகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய அனுபவசாலி ஆவார்.
தற்போது இவர் அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம் வெளிநாட்டு பொருளாதார விவகாரத் துறையில் ஆலோசகராக உள்ளார்.
ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தில் சேருவதற்கு முன்பாக இவர் விசா என்ற அமைப்பில் மூத்த இயக்குநராக இருந்தார்.
ஆரம்பத்தில் இவர் சர்வதேச வர்த்தகத்துக்கான அமெரிக்க கோர்ட்டில் நீதிபதி ஜேனி ஏ ரெஸ்டானியின் சட்ட எழுத்தாளராக பணியாற்றியவர் ஆவார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.