குழந்தைக்கு பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த மே மாதம் 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here