ஸ்காட்லாண்ட்: பள்ளிக்கு அரை கால்சட்டை அணிந்து சென்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம் வீட்டிற்கு திருப்பி அனுப்பியதால், பாவாடை அணிந்து தனது எதிர்ப்பை காட்டியுள்ளார் 16 வயதான ஷேன் ரிச்சர்ட்சன்.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. ஒவ்வொரு வருடமும் வரும் வெய்யில் காலங்களில் மாணவர்கள் அரை காற்சட்டை அணிவது வழக்கம்.
ஆனால் திடீரென பள்ளி நிர்வாகம் பள்ளி சீருடையான நீள கால்சட்டை மற்றும் பாவாடைக்கும் மட்டுமே அனுமதி என்று கொள்கை நடைமுறையினை மாற்றியதால், தான் தனது தங்கையின் பள்ளிப்பாவாடைய கடன்வாங்கி அணிந்து வந்து பள்ளி நிர்வாகத்தின் சீருடைக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அம்மாணவர் கூறினார்.
இந்த கடுமையான வெப்பநிலை இன்னும் 10 நாட்களுக்கு நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.