உலகக் கடல் நாள் (World Ocean Day) ஒவ்வோர் ஆண்டும் சூன் 8 ஆம் நாள் அனுசரிக்கபடுகிறது.
பூமியில் நாம் வாழும் கடல்,பெரும்பங்குவகிக்கிறது கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது.
கடல், ஒவ்வோர் ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும். ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது,
காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது! சில சமூகத்தினரின் வாழ்வாதாரம் கடலைச் சார்ந்தே அமைந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் சுகாதார , பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, கடல் நம் வாழ்வாதாரத்திற்கான பெரும்பகுதியை தன்னகத்தே வைதுள்ளது.
பூமித்தாயின் வெப்பத்தை சமன் படுத்துவதில் கடலின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது.
பல மீனவர்களின் வாழ்வாதாரம் கடலை நம்பித்தான் இருக்கிறது. அதனால்தான் மீனவர்களுக்குக் கடல் தாயாக விளங்குகிறாள்.