நடனக் கலைக்கும் வாழ்வாதாரத்திற்கும் என்னையே அழித்து கொண்டேன் என்கிறார் நடனக்கலை ஜாம்பவான் டத்தோ ராம்லி இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா: புகழ் பெற்ற நடனக்கலை ஜாம்பவான் ராம்லி இப்ராஹிம், சமீபத்தில் நடைபெறவிருந்த  ஒரு சொற்பொழிவு கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டதை அடுத்து, 37 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு அனுபவத்தை பெற்றுள்ளது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளியிடப்பட்ட 1984 ஆம் ஆண்டில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், ராம்லி தனது தொண்டூழிய நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட நேரத்தை விவரித்தார். இந்திய நடனக்கலை நிகழ்ச்சி நடைபெற்றால் முஸ்லீம்கள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்திற்காக ஆடிட்டோரியத்திற்கான முன்பதிவு நிராகரிக்கப்பட்டது என்று அவர் எழுதினார்.

உள்ளூர் மருத்துவமனைக்கு இருதய கருவி வாங்க நிதி திரட்ட உதவுவதே இந்த  நிகழ்ச்சி என்று அவர் கூறினார். இக்கட்டுரை சூத்ரா அறக்கட்டளை முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் “கணிசமான நிதி உதவி” இழந்து, நிகழ்வுக்குத் தயாராகி வந்தவர்களை விரக்தியடையச் செய்தது என்று ராம்லி கூறினார்

“என் கலையை கட்டி காக்கவும், வாழ்வாதாரத்திற்கும்  நான் என்னை இழந்தேன்.”

இந்தியர்களின் பராம்பரிய நடனக்கலைஞர் ஒரு முஸ்லீம் “peculiar to Malaysia” ஒரு உண்மையான சங்கடத்தை ஏற்படுத்தியதாக ராம்லி தொடர்ந்து கூறினார். இருப்பினும் மலாய்க்காரர்கள்  வாழ்வாதரத்திற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம் கொண்டிருந்தவர்களின் மனதில் மோதல் அதிகமாக இருந்தது.

“வெளிப்படையான மோதல் என்னவென்றால், இந்தியர்களின் பரதம் ஒரு கோவில் நடனம், எனவே, அடிப்படையில் மதமானது, மறுக்க முடியாத உண்மை.” மலேசியாவில், நடனம் வகைப்படுத்தும்போது  தனித்தனி நிறுவனங்களாக கருதப்படுகிறது. அது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும், பட்டியலிடப்பட வேண்டும் மற்றும் ஒப்பிடப்பட வேண்டும்.

கடந்த சனிக்கிழமையன்று, யுடிஎம் தனது இஸ்லாமிய மையத்தின் ஆலோசனையின் பேரில் நடனம் எவ்வாறு மதசார்பற்றது என்பது குறித்த ராம்லியின் பேச்சை ரத்து செய்ததாக உறுதிப்படுத்தியது, ஏனெனில் பல்கலைக்கழகம் “எந்தவொரு தரப்பினரையும் புண்படுத்த விரும்பவில்லை”.

அந்த காரணத்தை மேற்கோள் காட்டி, பேச்சை நடத்துவதற்கு  மையம் அனுமதி மறுத்தது. ஆனால் ராம்லி இந்த காரணம் “பலவீனமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here