சிபு:
தொலைபேசி மோசடியில் சிக்கி சரவாக்கை சேர்ந்த பெண் ஒருவர் RM600,000 ஏமாந்தார் என்று சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் அஸ்மான் சப்ரி கூறினார்.
இது தொடர்பாக 40 வயதான பெண் அரசு ஊழியர் ஒருவரிடமிருந்து நேற்று ( செப்டம்பர் 12) போலீசார் புகார் ஒன்றை பெற்றதாக அவர் கூறினார்.
“ஆகஸ்ட் தொடக்கத்தில், பேராக்கில் உள்ள கூரியர் நிறுவனம் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் “பல அடையாள அட்டைகள் அடங்கிய பார்சலை அனுப்பியதாக சந்தேக நபர் அப்பெண்ணிடம் கூறினார்,” என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் குறித்த கூரியர் நிறுவனத்தின் தகவலை மறுத்தபோது, பேராக் காவல் நிலையத் தலைவர் என்று சொல்லப்படும் ஒருவருடன் அவரது தொலைபேசி இணைப்பு இணைக்கப்பட்டது, அவர் குறித்த பெண்ணை கூரியர் நிறுவனத்துடன் ஒத்துழைக்காததற்காக திட்டினார்.
“அதன் பின்னர், மற்றொரு சந்தேக நபரிடமிருந்து அவர் தனது வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியைப் பெற்றார், அவர் பணமோசடியில் ஈடுபட்டதாக அவருக்குத் தெரிவித்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் பீதியடைந்ததால், சந்தேக நபர் கூறிய அனைத்து வழிமுறைகளையும் அவர் பின்பற்றினார் என்று அஸ்மான் கூறினார். மேலும் குறித்த மோசடிக்கும்பலால் இது தொடர்பில் யாரிடமும் எதையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மோசடிக் கும்பலுக்கு அந்தப்பெண் மொத்தம் RM580,000. பணத்தை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்,”. பின்னர் சந்தேக நபர்களை இனி தொடர்பு கொள்ள முடியாதபோது தான் அந்தப் பெண் தான் மோசடியில் சிக்கியதாக உணர்ந்தார் என்றார் அவர்.
மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.