வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போர் பரிசீலிக்கப்படுவர்!
சிங்கப்பூர்-
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டு, அதற்கான சான்றிதழ் வைத்திருப்போருக்கு சிங்கப்பூர் வருவதற்கு அனுமதி வழங்க அந்நாட்டின் மனிதவள அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலன் உள்ளிட்டவையைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா, வேலை பாஸ் ஆகியவை வழங்கும் பணியை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் கூறுகின்றன.
மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.