ஹாங்காங் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை –
ஏற்கனவே இந்த பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிராக போராடிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறி நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த நிர்வாகிகள் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான 18 மில்லியன் ஹாங்காங் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 கோடி) சொத்துக்களையும் போலீசார் முடக்கினர்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே போல் ஆப்பிள் டெய்லி பத்திரிகை அலுவலகத்துக், அவரது மகன்கள் 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.