அலையவிடும் பாதிப்பில் இந்தோனேசியா !
இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 14,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
உலகின் 4-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தீநுண்மி அந்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூல
மேலும் 294 போ உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 54,950-ஆக உயா்ந்துள்ளது.
27 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் 1.2 கோடி பேருக்கே இதுவரை முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.