செய்தி இணையதளங்கள் முடக்கம் –
ஆனால் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அவர் 2018 மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரான் பொருளாதாரத்தில் பலத்த அடி விழுந்தது. இதில் இருந்து அவ்விரு நாளுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டுள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றும் இந்தப் பகையில் மாற்றம் இல்லை.
இந்தநிலையில் ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா அதிரடியாக முடக்கி உள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
இதனால் அந்த இணையதளங்களை அமெரிக்காவில் யாரும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த இணைய தளங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ, வர்த்தக துறையின் முத்திரைகளும் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டி.வி, ஏமனின் ஈரான் கூட்டாளியான ஹவுதி இயக்கத்தினரின் அல் மசிரா டி.வி.யும் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதுதொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.