ரஷியாவில் மாயம்!
விமானம் தரையிறங்க முயற்சித்தபோது திடீரென்று விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டானது.
ரஷியா நாட்டின் கிழக்கு பகுதி காம்சட்கோ தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் கம்சாட்ஸ்கியில் இருந்து பலானாவுக்கு விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது.
ஏ.என்.26 என்ற அந்த விமானத்தில் 22 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் தரையிறங்க முயற்சித்தபோது திடீரென்று விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டானது.
அதிகாரிகள், விமானியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் முடியவில்லை. அந்த விமானம் மாயமாகி உள்ளது. விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.