கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வதற்கு முன்பு, இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்

  – WHO வழங்கும் ஆலோசனை !

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதன் மூலம், ஊசி போட்டபின் வலி குறைவாக இருக்கும் என்று எண்ணி மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது என உலக சுகாதார நிறுவனம் ஆலோசனையுடன்  எச்சரித்துள்ளது.

தடுப்பூசி தொடங்கிய நாள் முதல் பல போலி செய்திகள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. இதை அடுத்து சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வரும் நிலையில் இந்த செய்திகளுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி பற்றிய அனைத்து தகவல்களும், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பல கேள்விகளுக்கான பதிலும் அதில் இடம் பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதில் மிகவும் பொதுவானது உடல் வலி. இந்த வலியை குறைக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக வலி மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். இது போன்று தடுப்பூசிக்கு முன்னதாக வலி மாத்திரைகளை எடுத்து கொள்வது தடுப்பூசியின் செயல் திறனைக் குறைக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசிக்குப் பிறகு ஒருவருக்கு காய்ச்சல், தலை வலி, உடல் வலி வந்தால் என்ன செய்யவேண்டும் ?

உலக சுகாதார அமைப்பின் கூறுபடி, தடுப்பூசிக்கு பிறகு வலி, காய்ச்சல், உடல் வலி, தசை வலி, கை வலி இருந்தால் வலி நிவாரணிகள் அல்லது பாராசிட்டமால் பயன்படுத்தலாம்.

தடுப்பூசி போடுவதற்கு முன்பாக வலி நிவாரணிகளை எடுத்து கொள்வது தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கை வலி, உடல் வலி , காய்ச்சல் பக்க விளைவுகள் அனைவருக்கும் வரும் என்று கூறமுடியாது. சிலருக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு ஒவ்வாமை நோய் இருக்கலாம். பொதுவாக ஆண்டி ஹிஸ்டமின்கள் ஒவ்வாமை நோய்க்கு தர கூடிய மருத்துங்கள்.

ஒவ்வாமை நோய் பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, தடுப்பூசிக்கு பிறகு வரும் ஒவ்வாமைக்கு தகுந்தாற்போல் ஆண்டிஹிஸ்டமின்கள் பரிந்துரைக்கப்படலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here