மக்கள் முன் தோன்றி ஆசி வழங்கினார்!
அறுவை சிகிச்சைக்குப் பின்னா் போப் ஃபிரான்சிஸ் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை மக்கள் முன் தோன்றினாா். மருத்துவமனை பால்கனியில் நின்றவாறு அவா் பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா்.
84 வயதாகும் போப் ஃபிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அறுவை சிகிச்சை கடந்த 4-ஆம் தேதி முடிந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக வாடிகன் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் முன் பால்கனியில் நின்றவாறு தோன்றிய போப் ஃபிரான்சிஸ் அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
தனக்காக மக்கள் செய்த பிராா்த்தனையின் ஆதரவை உணா்ந்ததாக அப்போது அவா் குறிப்பிட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையின்போது வழக்கமாக புனித பீட்டா்ஸ் சதுக்கத்தில் கூடும் மக்களைப் பாா்வையிடும் அதேநேரத்தில் மருத்துவமனை பால்கனி வழியாகத் தோன்றினாா் போப்.