சாதித்துக் காட்ட கனவை மாற்றிய நீச்சல் வீரர்

தீவிரவாதத் தாக்குலில் காலை இழந்தவர்

ஈராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மொசூல் நகரில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பினர் நிகழ்த்திய கார் வெடி குண்டு தாக்குதலில் ஒற்றை காலை இழந்தவர் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத்.

தலைசிறந்த தொழிற்முறை கால்பந்து வீரர் ஆக வேண்டும் என்ற கனவு 17 வயதிலேயே சிதைந்து போனது. வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத அவர், நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

உள்ளூர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்த மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத், 2018 இல் ஈராக்கில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2  ஆம் இடம் பிடித்து அசத்தினார்.

தன்னம்பிக்கையுடன் வெற்றிநடை போடும் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத், சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து ஈராக் கொடியை சுமந்துச் செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது என்கிறார்.

உலகின் தலைசிறந்த நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் தான் தமக்கு பிடித்த வீரர் என்று கூறும் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத், அவருக்கு அடுத்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தமது கனவு என்கிறார்.

பயங்காராத தாக்குதலில் காலை இழந்த போதிலும் அதோடு முடங்கி விடாமல், சாதனை படைத்தது மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாகி இருக்கிறார் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here