கருத்துக்கணிப்பில் தகவல்
மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பகுதியளவில் இந்த மாதம் பள்ளிக்கூடங்களை திறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடிய பள்ளிக்கூடங்களை எப்போது திறப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற ஆன்லைன் தளம் நாட்டின் 361 மாவட்டங்களில், 32 ஆயிரம் பெற்றோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
* 30 சதவீத பெற்றோர், தங்கள் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்து விட்டால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயார் என்று கூறுகின்றனர்.
* 21 சதவீத பெற்றோர், பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கின்றனவோ அப்போது தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு தயார் என்கிறார்கள்.
* 48 சதவீத பெற்றோர், கொரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிற வரையில், அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயாராக இல்லை என தெரிவிக்கின்றனர்.