காருடன் மோதிய மோட்டார் வண்டி உணவு விநியோகஸ்தர்; சம்பவ இடத்திலேயே பலி

பெட்டாலிங் ஜெயா: நேற்று  மோட்டார் வண்டி கார் மீது மோதிய சம்பவத்தில் உணவு விநியோகஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த விபத்தில், தலையில் காயம் ஏற்பட்ட 26 வயதான அஸ்றீஹ் அஸ்ரி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மான் கூறுகையில், சம்பவத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் பண்டார் என்ஸ்டெக்கிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) விடுதி நோக்கி பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், சாலையில் முன் வலது சந்திப்பில் இருந்து திடீரென வந்த பெரோடுவா அல்சா கார் மீது மோதிக் கீழே விழுந்தார்.

“தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் மற்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு (HTJ) கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

மேலும், மோதிய காரின் ஓடுநருக்கு (27) எந்த காயமும் இல்லை.

“நாங்கள் இச்சம்பவம் தொடர்பாக இன்னும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம், சாலை போக்குவரத்து சட்டம் (APJ) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் இவ் வழக்கு விசாரணை செய்யப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here