தந்தையை கத்தியால் குத்திய வாலிபருக்கு 4 நாட்கள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர் (ஆகஸ்டு 30): சாரிகேயில் உள்ள கம்போங் ஹிலீர் செலாலாங்கில் உள்ள ஒரு வீட்டில் தனது சொந்த தந்தையை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் வேலையில்லாத ஒரு வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு 10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தனது தந்தையை கத்தியால் குத்துவதற்கு முன்னர் 21 வயதான அந்த வாலிபர் 53 வயதான ஒரு பெண்ணுடன் தகராறு செய்ததாக நம்பப்படுகிறது என்று சாரிகே மாவட்ட போலீஸ் தலைவர் அவாங் அர்ஃபியன் அவாங் புஜாங் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இடது தோள்பட்டை மற்றும் உடலின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.

விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதோடு, தண்டனைச் சட்டம் பிரிவு 324 -ன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் ஒரு அறிக்கையில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here