முன்னாள் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் ஜமான் கான் காலமானார்

கோலாலம்பூர் : புக்கிட் அமான் முன்னாள் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் ஜமான் கான் இன்று காலை 10.15 மணிக்கு காலமானார். அவர் தனது 80 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது .

அத்தோடு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளுக்காக அவரது உடல் புக்கிட் அமான் மசூதிக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் இன்று பிற்பகல் புக்கிட் கியாரா முஸ்லீம் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறியப்படுகிறது.

அவரது மரணத்தை முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹனிஃப் உமர் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here