மலேசிய வரலாற்றில் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை இயக்குநராக ஒரு பெண் நியமனம்

ஈப்போ: சபியா மொஹ்த் நோர், ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (Jakoa) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் ஒராங் அஸ்லி பெண் என்ற வரலாறு சாதனைப் படைத்துள்ளார். 56 வயதான சபியா மொஹ்த் நோர் நியமனத்திற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்தார்.

இந்த நியமனக் கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்  செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார். இந்த நியமனத்திற்கு முன், சபியா உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அமலாக்க மேலாண்மை பிரிவு தலைவராக இருந்தார். அவர் கேமரன் ஹைலேண்ட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்லி முகமது நோரின் தங்கை ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here