தங்கு விடுதியில் இறந்து கிடந்த தனது குழந்தையின் பிறப்பை மறைத்த நேபாள பெண் கைது

அலோர் காஜாவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விடுதியில் இறந்து கிடந்த தனது குழந்தையின் பிறப்பை மறைத்ததாக கூறி நேபாள பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நேற்று (செப்டம்பர் 22) தொழிற்சாலை ஊழியர் ஒருவர் அளித்த புகாரை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர்  அர்ஷாத் அபு கூறினார்.

போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​தொப்புள் கொடியுடன் ஒரு ஆண் குழந்தையின் உடல் ஹாஸ்டலின் ஒரு படுக்கையில் கருப்பு பிளாஸ்டிக் பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அர்ஷாத் வியாழக்கிழமை (செப்டம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில், 28 வயது பெண்ணை கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 20) அதிகாலை 1.30 மணியளவில் கிளினிக்கிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக சந்தேகித்து, மருத்துவமனை அவரை அலோர் காஜா மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர். ஆனால் அவர் பின்னர் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று அவர் கூறினார். ஆனால் தனக்கு பிறந்த குழந்தையை மறைத்த குற்றத்திற்காக நேற்று மதியம் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக நேபாள் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் காதலனை போலீசார் இப்போது தேடுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here