நேற்றைய புதிய கோவிட் -19 இறப்புகள் 132 ஆக பதிவு

பெட்டாலிங் ஜெயா: நேற்று 132 பேர் கோவிட் -19 தொற்று நோயால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் கிட்ஹப் தரவுத்தளத்தினூடாக (GitHub database) அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்த கோவிட்-19 இறப்புக்களது எண்ணிக்கை 27,113 ஆக உள்ளது.

பெரும்பாலான இறப்புகள் பினாங்கில் (33) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து சரவாக் (19), சபா (15), பேராக் (14), சிலாங்கூர் (13),கிளந்தான் மற்றும் திரெங்கானு (தலா 6), பகாங் (4), கெடா (3) பெர்லிஸ் (2), மலாக்கா மற்றும் கோலாலம்பூர் (தலா 1) இறப்புக்களையும் பதிவு செய்தன.

நெகிரி செம்பிலான், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here