கடந்த 24 மணி நேரத்தில் 7,420 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு , 11,413 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர் :  கடந்த 24 மணி நேரத்தில் 7,420 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இன்று 11,413 பேர் குணமடைந்திருப்பதாகவும், இதுவரை சிகிச்சையின் பின் குணமடைந்து வீடு திரும்பியவர்களது மொத்த எண்ணிக்கை 2,251,758 ஆக உள்ளதாகவும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

இதுவரை பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19  தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 2,377,033 ஆக உள்ளது என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில் 700 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் 635 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 65 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 364 நோயாளிகளுக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது , அவர்களில் 282 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 82 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று தொற்றுக்குள்ளானவர்களில் 6,842 மலேசியர்கள் மற்றும் 561 வெளிநாட்டவர்கள் அடங்கிய 7,403 உள்ளூர் தொற்றுக்கள் இருந்தன. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட 17 தொற்றுக்களும் இருந்தன.

புதிய நோய்த்தொற்றுகளில், 1.5 விழுக்காடு மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுக்கள் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

நாட்டின் கோவிட் -19 தொற்று விகிதம் (R0, அல்லது R-nott) 0.88 ஆக தொடர்ந்தும் இருக்கிறது , புத்ரஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் மிக உயர்ந்த அளவு R-nought  1.04 ஐக் கொண்டுள்ளன.

மேலும், வேறு எந்த மாநிலமும் R-nought 1.0க்கு மேல் பதிவு செய்யப்படவில்லை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here