கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் ஆலய 5ஆவது வார புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நாளை காலை 4 மணிக்கு நேரடி ஒளிப்பரப்பு

தென்கிழக்காசிய திருப்பதி என்று போற்றப்படுவதும் மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமுமான கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத மிக விமரிசையான முறையிலும் அதே வேளை அரசாங்கத்தின் எம்சிஓவை (MCO) கடைபிடித்து பூஜைகள் நடைபெற்று வருவதாக ஆலயத் தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

புரட்டாசி மாதமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும்  புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  அதே போல் நாளை 5 ஆவது சனிக்கிழமை  விடியற்காலை சிவன் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கோ பூஜை உள்ளிட்ட விஷேச பூஜைகளை பக்தர்களுக்காக நேரடியாக ஒளிப்பரப்படும். பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு எம்பெருமாளின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here