நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களைக் கொண்ட மாநிலமாக சரவாக் உள்ளது

கோலாலம்பூர், நவம்பர் 29 :

சனிக்கிழமை (நவ. 27) நிலவரப்படி, சரவாக்கிலுள்ள பெரியவர்களில் 602,180 தனிநபர்கள் அல்லது 30.4 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதால், சரவாக் மாநிலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பூஸ்டர் டோஸ் பெற்றவர்களைக் கொண்டுள்ளது என்று துணைச் சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி கூறினார்.

அக்டோபர் 13 முதல் பூஸ்டர் டோஸ் மற்றும் கூடுதல் டோஸ்களை அமல்படுத்தும் முதல் மாநிலம் சரவாக் என்று கூறியதுடன் “சரவாக்கிற்கான பூஸ்டர் டோஸ் நிர்வாகத்தின் இலக்கு விகிதம் 2,042,700 நபர்கள்” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி-பதில் அமர்வின் போது கூறினார்.

சரவாக் மாநிலம் மற்றும் இக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) முன்னேற்றத்தை அறிய விரும்பிய அஹமட் ஜானி ஜவாவியின் (GPS-Igan) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

டாக்டர் நூர் ஆஸ்மி மேலும் கூறுகையில், சரவாக்கில் தடுப்பூசி தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 27 வரை, மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

இதில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 91.1 சதவீதம் பேரும், பதின்மவயதினரில் 85.9 சதவீதம் பேரும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், இக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் வசிப்பவர்களில் 86.9 சதவீதம் பேர் நவம்பர் 25 ஆம் தேதி வரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்றார்.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here