சிங்கப்பூரின் பாசீர் ரிஸில் விபத்துக்குள்ளாகிய லோரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

சிங்கப்பூர்: நேற்று (அக்டோபர் 18) சிங்கப்பூரின் பாசீர் ரிஸில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 58 வயதான லோரி ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாசீர் ரிஸ் டிரைவ் 10, புளோக் 645 க்கு அருகில் நேற்று இரவு 8.25 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

மீட்பு பணியாளர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு சென்றதாகவும், பாதிக்கப்பட்ட லோரி ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மயக்கமடைந்தார், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் இவ்விபத்து தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

-CNA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here