கர்நாடகாவில் புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்  கர்நாடாவிலும் பரவியுள்ளது. அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கர்நாடகாவில்  7 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆணையர் டி ரன்தீப் கூறியதாவது:  கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 3 பேரும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 பேரும் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய வகை தொற்றை கண்காணிக்க மத்திய அரசுடன் இணைந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய வகை தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here