கடந்த 24 மணி நேரத்தில் 4,343 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 5,190 குணமடைந்துள்ளனர் என்றார். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,412,395 ஆக உள்ளது.
மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,506,309 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார். தீவிர சிகிச்சையில் 554 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 518 பேர் கோவிட்-19 தொற்றும் எனவும் மேலும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் 272 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது, 212 நோயாளிகள் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 60 பேர் தொற்று இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 4,334 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 4,120 மலேசியர்கள் மற்றும் 214 வெளிநாட்டினர் மற்றும் ஒன்பது இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகளும் அடங்கும். புதிய நோய்த்தொற்றுகளில், நோயறிதலின் போது 1.6% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
நாட்டின் கோவிட்-19 தொற்று விகிதம் 0.91 ஆக இருந்தது. புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை முறையே 1.09 மற்றும் 1.00 என்ற அதிகபட்ச R-Nought அளவைக் கொண்டுள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களும் 1.00க்கும் குறைவான R-நொட்களை பதிவு செய்தன, அதே சமயம் லாபுவானில் R-nought பூஜ்ஜியம் இருந்தது.





















