இந்தியா – சிங்கப்பூர் இடையே விமான சேவை நவ.29 முதல் மீண்டும் ஆரம்பம்

கொரோனா காரணமாக சிங்கப்பூர் – இந்தியா இடையேயான விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் “தடுப்பூசி பயண பாதை (VTL-Vaccinated Travel Lane)” என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விமானங்கள் எதிர்வரும் 29 ஆம் தேதியிலிருந்து சென்னை, டெல்லி, மும்பை ஆகிட இடங்களிலிருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதுதவிர VTL அல்லாத விமானங்களும் செயல்படும். ஆனால் அதில் பயணிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை, கட்டாய தனிமைப்படுத்தல் போன்ற நிபந்தனைகள் உண்டு என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here