நேற்றைய கோவிட் இறப்பு சற்று அதிகரித்து 61 ஆக பதிவு

covid

சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தில் நேற்று 61 கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 15 பேர்  (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 30,370 ஆக உள்ளது.

பெரும்பாலான இறப்புகள் சிலாங்கூரில் 14 இறப்பு என பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து தெரெங்கானு (11), பேராக் (6), ஜோகூர் (6), கோலாலம்பூர் (5), கிளந்தான் (5), நெகிரி செம்பிலான் (4), கெடா (3) , பஹாங் (3), சபா (2) மற்றும் சரவாக் (2). மற்ற  மாநிலங்களில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

நள்ளிரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) 507 உட்பட 65,497 செயலில் உள்ள  தொற்றுகள் உள்ளன. அவர்களில் 272 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 4,984 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,627,903 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here