24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 5,806 – குணமடைந்தோர் 7,246

கடந்த 24 மணி நேரத்தில் 5,806 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,644,027 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

7,246 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  அதே நேரத்தில் 511 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 368 பேர் கோவிட் -19 தொற்று எனவும் மற்றும் 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

மொத்தம் 266 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 145 நோயாளிகள் கோவிட்-19 தொற்றும் மீதமுள்ள 121 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 5,795 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 5,542 மலேசியர்கள் மற்றும் 253 வெளிநாட்டினர் மற்றும் 11 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.8% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று ஆறு கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here