உலகளவில் கோவிட் -19 வைரஸ் தொற்று நோய்க்குப் பலியானோர் எண்ணிக்கை 53 இலட்சத்தைக் கடந்தது!

உலகம் முழுவதும் கோவிட் -19 வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அதன் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.17 கோடியைத் தாண்டியது.

இதுவரை கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26.87 கோடியைக் கடந்துள்ளது.

அத்தோடு கோவிட் -19 வைரஸ் பரவியவர்களில் 2.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88,000க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கோவிட் -19 பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here