கோலாலம்பூர், டிசம்பர் 14 :
செராஸின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின், பல மாடிகள் கொண்ட வாகன நிறுத்துமிடத்திலுள்ள குப்பைத் தொட்டியில், தொப்புள் கொடியுடன் காணப்பட்ட பெண் குழந்தையின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
மாலை 5.50 மணியளவில் கோலாலம்பூர் டிபிகேஎல் (DBKL) துப்புரவு பணியாளர்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முஹமட் இட்ஸாம் ஜாபர் தெரிவித்தார்.
“டிபிகேஎல் பணியாளர், அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் குப்பைத் தொட்டியை எடுக்கும்போது, தொப்புள் கொடியுடன் இருந்த ஒரு பெண் குழந்தையின் உடலைப் பார்த்து, தனது மேற்பார்வையாளருக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பவ இடத்திற்கு அறிக்கை பெற்று ஆய்வு செய்த போலீசார், இறந்த சிசுவின் உடலில் அடையாளங்கள் எதுவும் இருக்கவில்லை என்றனர்.
மேலும் குழந்தையின் உடல் தடயவியல் பிரிவு, துவாங்கு முஹ்ரிஸ் யுகேஎம் அதிபர் மருத்துவமனை (எச்.சி.டி.எம்), செராஸ், பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
பிறப்பை மறைத்ததற்காகவும், குழந்தையை தூக்கி எறிந்ததற்காகவும் குற்றவியல் சட்டம் பிரிவு 318 இன் கீழ் போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
எனவே, வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 013-2165881 என்ற எண்ணிலோ அல்லது KL போலீஸ் ஹாட்லைன் 03-21460584 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.