கோத்தா கினாபாலு, டிசம்பர் 14 :
குடிபோதையில் தனது தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 15 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.
அல்முடின் லோஹோங், என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி காலை 9 மணியளவில், கம்போங் லோக் உறை, பூலாவ் காயாவில் உள்ள ஒரு வீட்டில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிபதி ஜெசிகா ஓம்போ ககாயுன் முன், அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், தங்கள் வீட்டில் உள்ள சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததற்காகவும், தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர், அந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியதுடன் சம்பவத்தின் போது தான் குடிபோதையில் இருந்ததால் தனது தாயை அச்சுறுத்தியதை உணரவில்லை என்றும், இது தான் தனது முதல் குற்றம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனாலும் காவத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் பாசிரி, அவருக்கு சிறைத்தண்டனையை வலியுறுத்தினார். அத்துடன் குற்றவாளி யாராலும் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது