பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 16 :
தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தில் (சட்டம் 342) முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்காக, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ அசார் அஜிசான் ஹருன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
நாடாளுமன்றக் கூட்டம் இன்று முடிவடைவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.