கூச்சிங், டிசம்பர் 26 :
கனமழை தொடர்ந்தால், சரவாக் முழுவதும் மொத்தம் 349 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தத்தில், சிபு 90 இடங்களுடன் அதிக ஆபத்துள்ள பகுதியாக உள்ளது, அதைத் தொடர்ந்து மிரி (78), சமரஹான் (61), கூச்சிங் (54), லிம்பாங் (30), ஸ்ரீ அமான் (23) மற்றும் பிந்துலு (13) ஆகிய இடங்கள் உள்ளன.
நாளை முதல் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) சரவாக், 257 துணை தீயணைப்பு அதிகாரிகள் (PBB) உட்பட கிட்டத்தட்ட 1,400 உறுப்பினர்கள் வெள்ளத்தால் ஏற்படும் எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ளத் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சரவாக் ஜேபிபிஎம் இயக்குநர், டத்தோ கிருதின் ராஹ்மான் இதுபற்றிக் கூறுகையில் , தயார் நிலையிலுள்ள JBPM மற்றும் PBB உறுப்பினர்களை தவிர 2,349 உறுப்பினர்களின் பலத்துடன் 56 தன்னார்வ தீயணைப்புப் படைகளையும் (PBS), 8,624 உறுப்பினர்களைக் கொண்ட சமூக தீயணைப்புப் படையையும் தயார் செய்துள்ளதாக கூறினார்.
அவரது கூற்றுப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்கான ஏற்பாடுகள் 57 சமூக அவசரகால மீட்புக் குழுக்களின் (CERT) 10,374 தன்னார்வலர்கள் மற்றும் 820 சமூகத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உதவியுடன் ‘கோடைக்கால முகாமின் மூலம்’ பயிற்சியளிக்கப்பட்ட மீட்பு அம்சங்களை வெளிப்படுத்துவர்.
“தற்போதுள்ள அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் பலம் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் சேர்க்கையுடன், ஜேபிபிஎம் சரவாக் கனமழையால் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ள எப்போதும் தயாராக உள்ளது.
வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் தவிர, ஜேபிபிஎம் சரவாக், எதிர்பாராத பகுதிகளுக்கு பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை அனுப்ப தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) பருவமழையைத் தொடர்ந்து செவ்வாய் முதல் வியாழன் வரையிலான காலப்பகுதியில் கிழக்கு ஜோகூர், கிழக்கு சபா மற்றும் மேற்கு சரவாக் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான மழை முன்னறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.