சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 25 புதிய கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதில், நான்கு பேர் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 31,487 ஆக உள்ளது.
சிலாங்கூர் (10), பினாங்கு (5), பேராக் (3), தெரெங்கானு (3), ஜோகூர் (1) பகாங் (1), சபா (1) மற்றும் கெடா (1) ஆகிய இடங்களிலும் உள்ளன.
கிளந்தான், நெகிரி செம்பிலான், சரவாக், மலாக்கா, பெர்லிஸ், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய நகரங்கள் எந்த மரணத்தையும் பதிவு செய்யவில்லை.
நள்ளிரவு நிலவரப்படி 41,221 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 269 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 163 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. மேலும் 3,988 பேர் குணமடைந்துள்ளனர்.
மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,758,086 ஆக உள்ளது.